”டாஸ்” போட்டு தியேட்டரை தூக்கிய “துணிவு”
மூன்று அரங்குகள் கொண்ட தியேட்டரான அந்தமான் ஆனந்த் பாரடைஸ் தியேட்டரில் ஒரு அரங்கில் ‘துணிவு’ ஒரு அரங்கில் ‘வாரிசு’ என திரையிடப்பட்ட நிலையில் மூன்றாவது அரங்கில் எந்தப் படம் திரையிடப்பட வேண்டும் என்ற குழப்பம் எழுந்தது. இருவருக்குள்ளும் போட்டியும் நிலவி வந்தது…
இந்நிலையில் டாஸ் போட்டு முடிவு செய்தனர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள்.
இதற்காக இருவர்களது முன்னிலையில், திரையரங்கு நிர்வாகம் டாஸ் போட்டது. டாஸில் வென்ற அஜித் ரசிகர்களுக்கு மூன்றாவது ஸ்கிரீன் வழங்கப்பட்டது.
அந்தமான் ஆனந்த் பாரடைஸ் தியேட்டரில் இரண்டு திரைகளில் துணிவு படம் திரையிடப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.