ஆஸ்கருக்குள் நுழைந்த “காந்தாரா”
ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். வசூல் ரீதியாகவும் ப்ளாக் பஸ்டர் அடித்தது இந்த திரைப்படம்.
இந்த நிலையில், ‘காந்தாரா’ திரைப்படம் இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதியில் நுழைந்திருக்கிறது என்பதை தயாரிப்பு நிறுவனமான ஹாம்பலே தெரிவித்திருக்கிறது.
இந்தப் பயணத்தில் உடன் நின்ற அனைவருக்கும் நன்றி. ‘காந்தாரா’ மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பது சந்தோஷம் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக கொண்டாடி வருகின்றனர்.