பொன்னியின் செல்வன் 2’ இசைக்கோர்ப்பு பணியில் ஏ ஆர் ரகுமான்!

 பொன்னியின் செல்வன் 2’ இசைக்கோர்ப்பு பணியில் ஏ ஆர் ரகுமான்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இப்படம் மிகப்பெரும் வசூல் வேட்டை நிகழ்த்தி நிலையில், அடுத்த பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இரண்டாம் பாகத்திற்கான இசைக்கோர்ப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக மணிரத்னம் மற்றும் ஏ ஆர் ரகுமான் இருவரும் லண்டனுக்கு பறந்து சென்றிருக்கின்றனர்.

விரைவில் இசை வெளியீட்டு விழாவை நிகழ்த்த படக்குழு முடிவு செய்துள்ளது.

 

Related post