மலைவாழ் மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் கொடுத்த நடிகர் பாலா!
ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உட்பட 18 மலை கிராமத்தில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மலைகிராமம் என்பதால், சரியான மருத்துவ வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர் இப்பகுதி மக்கள்.
இந்நிலையில், விஜய் டிவி மூலம் பிரபலமடைந்த நடிகர் பாலா, தனது சொந்த செலவில் சுமார் 5 லட்சம் மதிப்பில் ஒரு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார்.
மக்கள் கொடுத்த வரவேற்பால் தான் இந்த அளவிற்கு நான் நிற்கிறேன். என்னால் முடிந்த உதவிகளை இன்னும் நிறைய செய்து வருவேன் என்று கூறினார் பாலா.
பாலாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து மக்களுக்கு பல உதவிகளை செய்துவருகிறார் பாலா என்பது குறிப்பிடத்தக்கது.