கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்… – சீமானுக்கு எச்சரிக்கை விடுத்த ராஜ்கிரண்!

 கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்… – சீமானுக்கு எச்சரிக்கை விடுத்த ராஜ்கிரண்!

சில தினங்களுக்கு முன் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடித்தினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அப்போது பேசிய சீமான், “ இங்கு இருக்கக் கூடிய கிறிஸ்தவர்களும் நமக்காக வாக்களிக்க போவது கிடையாது. நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் தான். அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது” என சீமான் காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான ராஜ்கிரண் கடுமையாக சீமானை எச்சரித்திருக்கிறார்.

அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ, அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல. “இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.

இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்”, பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்.

இந்தப்பொறுமையை, தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ராஜ்கிரண்.

 

Related post