விஜயகாந்த் மறைவு; தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்த அஜித்!
நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் மறைவு தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பலரும் தங்களது இரங்கலை நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஜய் சேதுபதி என பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானில் இருப்பதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
இதனால், பிரேமலதா மற்றும் சுதீஷ் இருவரிடமும் தொலைபேசி வாயிலாக அழைத்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். விரைவில் சென்னை வந்து நேரில் சந்திப்பதாகவும் கூறியிருக்கிறார்.