லைட் மேன்களின் குடும்பத்திற்காக இசை நிகழ்ச்சி நடத்தும் ஏ ஆர் ரகுமான்

 லைட் மேன்களின் குடும்பத்திற்காக இசை நிகழ்ச்சி நடத்தும் ஏ ஆர் ரகுமான்

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிற்கே மிகப்பெரும் ஆளுமையாக இருந்து வருகிறார்.

தனது இசையால் பல கோடி ரசிகர்களை தன்னகத்தே வைத்திருக்கிறார். இவரது இசை நிகழ்ச்சி பெரும் எதிர்பார்க்கப்படும் ஒன்று.

வெளிநாடுகளில் அவ்வப்போது இவரது இசை நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வரும்.

அதன்படி மார்ச் 19ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கியமாக இந்த இசை நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதியானது, திரைப்பட படப்பிடிப்புகளின் போது உயிரிழந்த லைட் மேன்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஆர் ரஹ்மானின் இந்த இசை நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related post