ஐந்து வருடங்களுக்குப் பிறகு துளிர் விடும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம்!
தனுஷ் கடந்த ஐந்து வருடங்களாக படங்கள் தயாரிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவரது Wunderbar நிறுவனம் மூலமாக மீண்டும் பட தயாரிப்பில் இறங்கி இருக்கிறார்.
Wunderbar நிறுவனத்தின் 15வது படத்தை தனுஷ் நேற்று மாலை அறிவித்தார். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கவிருப்பதாகவும் அறிவித்தார்.
தனுஷிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படம் தான் அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம்.
கர்ணன் படத்தில் இருந்த தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.