மே முதல் வாரத்தில் “குட் பேட் அக்லி” படப்பிடிப்பை துவக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்; அப்போ விடா முயற்சி!?

 மே முதல் வாரத்தில் “குட் பேட் அக்லி” படப்பிடிப்பை துவக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்; அப்போ விடா முயற்சி!?

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பானது சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு அனைத்தும் வெளிநாடுகளில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பானது விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை. இந்த நிலையில், அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “குட் பேட் அக்லி” என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.

இதனால், விடாமுயற்சி படப்பிடிப்பானது நிறுத்தப்பட்டது என்ற தகவல் வெளியானது. இதை உறுதிபடுத்தும்விதமாக, குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை வரும் மே மாதம் முதல் வாரத்தில் படக்குழு துவங்கவிருக்கிறதாம்.

அதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டு நடிக்கவிருக்கிறாராம். முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதனால் அஜித்குமார் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

 

Related post