அதை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன் – பதிலடி கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ்!

 அதை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன் – பதிலடி கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் மாமன்னன்.

மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், நேற்றைய தினம் மாமன்னன் படத்தின் 50வது வெற்றிவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இவ்விழாவில், படத்திற்காக உழைத்த அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய மாரி செல்வராஜ் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி கூறினார். மேலும், 30 வருடங்களாக எனக்குள் இருந்த வலியைத் தான் நான் படமாக எடுத்திருக்கிறேன் என்றும் கூறினார். அதுமட்டுமன்றி, படத்தின் பாடல் வரிகளில் வரும், நான் பாடிக் கொண்டிருப்பது பழைய பாடலாக இருக்கலாம். அதை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன் என்று கூறி தனது பேச்சை முடித்துக் கொண்டார் மாரி செல்வராஜ்.

சமீபத்தில் நடைபெற்ற நாங்குநேரி சம்பவத்தில் சிலர், சமீபத்தில் வெளிவந்த படங்கள் தான் இந்த மாதிரியான சம்பவங்களுக்குக் காரணம் என்று கூறினர். அதற்கு நெற்றிப் பொட்டில் அடிக்கும் விதமாக இந்த பாடலை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன் என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

Related post