அதிகரிக்கும் காட்சிகள்; மகிழ்ச்சியில் “சைரன்” படக்குழு!

 அதிகரிக்கும் காட்சிகள்; மகிழ்ச்சியில் “சைரன்” படக்குழு!

றிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்றைய தினம் திரைக்கு வந்த படம் தான் சைரன்.

விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு இப்படம் வெளியானது. நேற்றைய தினம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இன்று திரையரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

நேற்று இரவு திரையிட்ட இடங்களில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது சைரன் திரைப்படம்.

தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் வசூல் ரீதியாக சைரன் திரைப்படம் மிகப்பெரும் வெற்றிப் படமாக அமையும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

Related post