காந்தாரா 2″; பயிற்சி எடுக்கும் ரிஷப் ஷெட்டி!

 காந்தாரா 2″; பயிற்சி எடுக்கும் ரிஷப் ஷெட்டி!

கன்னடத்தில் உருவாகி மற்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட வெளியான திரைப்படம் காந்தாரா.

இப்படத்தை இயக்கி நடித்திருந்தார் ரிஷப் ஷெட்டி. வெறும் 16 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம், சுமார் 400 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்தது.

இதனால் உற்சாகமடைந்த படக்குழு, இதன் இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் உருவாக்க திட்டமிட்டுள்ளது.

அதிக சண்டைக் காட்சிகள் இப்படத்தில் இடம்பெறவிருக்கிறதாம். அதற்காக ரிஷப் ஷெட்டி பயிற்சி எடுத்து வருகிறாராம்.

வரும் டிசம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

Related post