மாமன்னன் படத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை – லோகேஷ் கனகராஜ்!!

 மாமன்னன் படத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை – லோகேஷ் கனகராஜ்!!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “மாமன்னன்”.

இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் நல்லதொரு பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில், இப்படம் தற்போது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தினை பார்த்த பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாமன்னன் படத்தினை பற்றி பேசியுள்ளார். அதில், “ நான் மிகவும் லேட்டாக விமர்சனம் கூறிகிறேன் என எனக்குத் தெரியும். இருப்பினும் ‘மாமன்னன்’ படம் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. படத்தின் எல்லா துறைகளிலும் நேர்த்தியான வேலைபாடுகள் தெரிகிறது. இன்னமும் அந்த படத்தில் இருந்து வெளியில் முடியவில்லை” என்று குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.”என்று கூறியுள்ளார்.

 

Related post