முக்கிய அறிவிப்பை வெளியிடும் “பத்து தல” படக்குழு!

 முக்கிய அறிவிப்பை வெளியிடும் “பத்து தல” படக்குழு!

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “பத்து தல”. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

படத்தினை வரும் 30 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை வரும் 3 ஆம் தேதி வெளியிட போவதாக படக்குழு நேற்றைய தினம் அறிவித்திருந்தது.

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான அறிவிப்பாகத்தான் இது இருக்கக்கூடும் என ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.

 

Related post