சலார் படக்குழுவினர் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கிய பிரபாஸ்!

 சலார் படக்குழுவினர் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கிய பிரபாஸ்!

பாகுபலி படத்திற்கு பிறகு எந்த வெற்றியும் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார் நடிகர் பிரபாஸ்.

பாகுபலிக்கு பிறகு வந்த ராதே ஷ்யாம், சாஹோ மற்றும் நேற்று வெளியான ஆதி புருஷ் உள்ளிட்ட படங்கள் எதுவும் வெற்றி பெறாமல் போய்விட்டது.

இந்நிலையில், கே ஜி எஃப் கொடுத்த இயக்குனரான நீல் பிரசாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தினை தான் பிரபாஸ் மலை போல் நம்பி இருக்கிறார்.

படம் நன்றாக வந்திருப்பதை கண்ட பிரபாஸ், படக்குழுவினர் அனைவருக்கும் தனது சொந்த பணத்தில் இருந்து சுமார் பத்தாயிரம் ரூபாயை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இதனை அறிந்த அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Related post