மயில்சாமியின் கனவை நான் நிறைவேற்றுவேன் – ரஜினிகாந்த்

 மயில்சாமியின் கனவை நான் நிறைவேற்றுவேன் – ரஜினிகாந்த்

நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் நடிகர் மயில்சாமி காலமானார். இவரின் உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ரஜினிகாந்த்.

அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மயில்சாமி என்னுடைய நீண்ட நாள் நண்பர். அவர் 23, 24 வயதிலிருந்து எனக்கு தெரியும். மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக இருந்த போதிலிருந்து தெரியும். அவர் எம்.ஜி.ஆர் ரசிகர். அடிக்கடி நாங்கள் சந்திப்போம். அப்போ சினிமா பற்றி பேச மாட்டார். சிவன் பற்றித் தான் பேசுவார்.

நாங்கள் நண்பர்கள் தான், ஆனால் நிறைய படங்களில் இணைந்து நடிக்கவில்லை. கார்த்திகை தீபம் அப்போது எனக்கு போன் செய்துவிடுவார். கடைசி கார்த்திகை தீபம் அப்போ பேச முடியலை. நகைச்சுவை நடிகர்கள் விவேக் மற்றும் மயில்சாமி இறப்பு சினிமாவிற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று.

மயில்சாமி சிவராத்திரி நாளில் உயிரிழந்தது தற்செயலானது இல்லை. சிவனின் கணக்கு அது. அவரின் தீவிர பக்தரை அவரின் உகந்த நாளில் அழைத்துச் சென்றுவிட்டார். மயில்சாமியின் கடைசி ஆசையை கேள்விப்பட்டேன். அதை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்”. என்று கூறினார்.

 

Related post