அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே… பெங்களூர் பணிமனையில் ரஜினிகாந்த்!

 அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே… பெங்களூர் பணிமனையில் ரஜினிகாந்த்!

ஜெயிலர் படத்தினை முடித்த கையோடு இமயமலை பயணம் மேற்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இமயமலை பயணத்தை முடித்த கையோடு வடக்கு மாகாணங்களில் இருக்கும் அரசியல்வாதிகள் பலரை சந்தித்து வந்திருந்தார் ரஜினி.

இந்நிலையில், சென்னை திரும்பிய ரஜினி மீண்டும் பெங்களூருவிற்கு பயணப்பட்டிருக்கிறார். அங்குள்ள, ஜெயநகரா பேருந்து பணிமனைக்கு விசிட் அடித்திருக்கிறார். இந்த பணிமனையில் தான் ரஜினிகாந்த் நடத்துனராக இருந்திருக்கிறார்.

தான் இருந்த இடங்களை பார்ப்பதற்காக திடீரென அங்கு விசிட் அடித்திருக்கிறார். அங்கு பணியில் இருந்த பணியாளர்கள் அனைவரும் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

 

Related post