மீண்டும் அயலான் இயக்குனரோடு சிவகார்த்திகேயன்!?

 மீண்டும் அயலான் இயக்குனரோடு சிவகார்த்திகேயன்!?

இன்று நேற்று நாளை படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ரவிக்குமார்… இந்தப் படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உருவான அயலான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ரவிக்குமார்.. இந்தப் படமும் ஒரு சயின்ஸ் பிக்சன் படம் என்பதால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சில வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யாவோடு ஒரு படத்தினை இயக்க ஒப்பந்தமானார் இயக்குனர் ரவிக்குமார். இப்படம் மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தது ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம்..

ஆனால் சில பல காரணங்களால் படத்தினை தற்போது தள்ளி வைக்க முடிவெடுத்து இருக்கிறார்கள் படக்குழுவினர். ஆகவே மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தினை இயக்க ரவிக்குமார் முடிவு எடுத்து சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி இருக்கிறாராம்.. கதையை கேட்டு முடித்த சிவகார்த்திகேயன் விரைவில் கூறுவதாக கூறி ரவிக்குமாரை அனுப்பி வைத்திருக்கிறாராம்.

 

Related post