பேனர் கட்டிய ரசிகர்கள் பலி; ஆறுதல் கூறிய சூர்யா!

 பேனர் கட்டிய ரசிகர்கள் பலி; ஆறுதல் கூறிய சூர்யா!

நடிகர் சூர்யா நேற்று தனது 48 பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக, அவரது ரசிகர்கள் பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தனர்.

பல இடங்களில் பேனர் கட்டியும், கோவில்களில் வழிபாடு செய்தும் சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடினர்.

இந்நிலையில், ஆந்திராவில் உள்ள சூர்யா ரசிகர்கள் இருவர், பிறந்தநாள் பேனர் கெட்டிய போது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி உரசியதால், மின்சாரம் தாக்கி இரு ரசிகர்கள் பலியாகினர்.

இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவர்களான இருவரும் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

இந்த தகவல் அறிந்து வீடியோ கால் மூலமாக இரு குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் நடிகர் சூர்யா. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் சூர்யா கூறியுள்ளார்.

 

Related post