கொலை மிரட்டல்; ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு!

 கொலை மிரட்டல்; ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு!

நடிகரும் தயாரிப்பாளருமான ஷாருக்கான் பாலிவுட்டில் மிக உயர்ந்த சினிமா நட்சத்திரம்.

இவரது படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருகின்றன. இந்த வருடத்தில் மட்டும் இவர் நடிப்பில் வெளிவந்த பதான், ஜவான் இரு படங்களும் சுமார் 1000 கோடி வசூலை வாரி குவித்திருந்தது.

இந்நிலையில், ஷாருக்கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் மஹாராஷ்டிரா அரசு ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு கொடுக்க முன் வந்திருக்கிறது.

அதன்படி, இனி அவருடன் ஆறு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் எந்நேரமும் இருப்பார்கள். இதுதவிர அவரது வீட்டைச் சுற்றி ஆயுதம் ஏந்திய நான்கு போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன் நடிகர் சல்மான்கானுக்கு கொலைமிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அவருக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related post