மீண்டும் தெலுங்கு இயக்குனர்.? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

 மீண்டும் தெலுங்கு இயக்குனர்.? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது பாதி முடிவடைந்திருக்கும் நிலையில், தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான கதை கேட்கும் படலத்தில் தற்போது விஜய் இறங்கியுள்ளார்.

பிரபல தெலுங்கு பட இயக்குனர், கோபிசந்த் மலினேனி விஜய்க்கு ஒரு கதை கூறியிருப்பதாகவும் விஜய் அதை ஓகே செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியாகியிருக்கின்றனர். விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார். கோடை விடுமுறை, ஓபனிங்க் என இந்த இரண்டால் மட்டுமே வாரிசு வசூலை குவித்ததே தவிர இயக்கம், கதை என இரண்டிலும் பெரும் தோல்வியைத் தான் தழுவியது.

இந்நிலையில், மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரா என்று விஜய் ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

 

Related post