எவ்ளோ வேணாலும் நான் தரேன் – நிர்வாகிகளுடன் அன்பு காட்டிய விஜய்!

 எவ்ளோ வேணாலும் நான் தரேன் – நிர்வாகிகளுடன் அன்பு காட்டிய விஜய்!

நடிப்பில் மட்டுமல்லாது தனது மன்றத்தையும் அவ்வப்போது கவனித்து வருகிறார் நடிகர் விஜய்.

தனது மக்கள் மன்றத்தின் மூலமாக விலையில்லா உணவகம், குருதியகம் மூலம் இரத்த தானம் செய்வது, விழியாகம் மூலமாக கண்தானம் செய்வது உள்ளிட்ட பல நல்ல விஷயங்களை அடுத்தடுத்து செய்து வருகிறார் விஜய்.

நிர்வாகிகளை தன் கட்டுக்குள் வைத்து தனது நிர்வாகிகள் மூலமாக ரசிகர்களை வைத்து அனைத்து தொண்டுகளையும் செய்து வருகிறார் விஜய்.

நேற்று சில முக்கிய நிர்வாகிகளை தனது பனையூர் இல்லத்தில் வைத்து சந்தித்த விஜய், தொடர்ந்து நல்ல விஷயங்களை செய்து வாருங்கள். இந்த தொண்டுகளை எல்லாம் செய்வதற்கு எவ்வளவு நிதி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இவரின் இந்த பாஸிடிவான பேச்சு நிர்வாகிகளை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது. நிர்வாகிகள் தொடர்ந்து களத்தில் இறங்கி தங்கள் பணிகளை இன்னும் முழு மூச்சாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்..

 

Related post