ரத்தம், வியர்வை, வலி கொண்டு “மார்க் ஆண்டனி”யை உருவாக்கியிருக்கிறோம் – விஷால்!

 ரத்தம், வியர்வை, வலி கொண்டு “மார்க் ஆண்டனி”யை உருவாக்கியிருக்கிறோம் – விஷால்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் இன்று வெளியாகிறது “மார்க் ஆண்டனி”.

படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவதால், தன் ரசிகர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் தகவல் ஒன்றினை பரிமாறியுள்ளார் நடிகர் விஷால்.

அதில், ”கடந்த ஓராண்டில் கடின உழைப்பு, ரத்தம், வியர்வை, வலி, காயங்கள், மரணத்துக்கு அருகே சென்று வந்த அனுபவங்களுக்குப் பிறகு, நான் மட்டுமல்ல ‘மார்க் ஆண்டனி’ உலத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த குழுவும், செப்.15 அன்று இந்த டைம் டிராவல் கேங்ஸ்டர் படத்தை உலகம் முழுவதும் சமர்பிக்க கிட்டத்தட்ட தயாராகிவிட்டோம்.

நான் இரண்டு கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். ஒன்று திருப்பதியில் நான் சென்று சரணடைந்த கடவுள். மற்றொரு கடவுள், திரையரங்குகளில் அவ்வப்போது நான் பார்க்கும், ஒரு நடிகனாக கடந்த 19 ஆண்டுகளாக என்னுடைய பயணத்தை ஊக்குப்படுத்தி ஆசிர்வதித்து வருபவர்கள்”. என்று கூறியுள்ளார்.

 

Related post