3 நாட்களில் மண்ணைக் கவ்விய “ஆதி புருஷ்”… வசூலில் மரண அடி!

 3 நாட்களில் மண்ணைக் கவ்விய “ஆதி புருஷ்”… வசூலில் மரண அடி!

பிரபாஸுடன் சயிப் அலிகான், கிருத்தி சனோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் “ஆதி புருஷ்”.

இப்படமானது முழுக்க முழுக்க மோஷன் கேப்சர் டெக்னாலஜி கொண்டு உருவாக்கப்பட்டது. இயக்கியிருந்தா ஓம் ராவத்.

சுமார் 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், வெளியான முதல்நாளிலே மரண அடி வாங்கியது.

படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக இருந்ததால், நெட்டிசன்களால் பெரிதும் கிண்டலுக்கு உள்ளானது.

தொடர்ந்து வசூலிலும் மிகப்பெரும் சரிவை சந்தித்தது ஆதி புருஷ்.

படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில், நாளுக்கு நாள் வசூல் குறைந்து கொண்டே செல்கிறது. படத்தின் விமர்சனத்தைக் கண்டு, புக் செய்த டிக்கெட்டுகள் கேன்சல் செய்யப்படுகின்றன..

வார இறுதியில் 126 முதல் 135 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், முதல் 3 நாட்களிலேயே பெரிய அளவில் வசூல் இல்லாததால், இனிவரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும் என்றே சொல்லப்படுகிறது. இதனால் பிரபாஸ் உட்பட ஆதிபுருஷ் படக்குழுவினர் சோகத்தில் உள்ளனர்.

 

Related post