ரஜினிகாந்த் மகள் வீட்டில் கொள்ளை… போலீஸ் விசாரணை

 ரஜினிகாந்த் மகள் வீட்டில் கொள்ளை… போலீஸ் விசாரணை

சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா வீட்டில் நகை மற்றும் வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தனது மகன்களுடன் தேனாம்பேட்டையில் தனியாக வசித்து வரும் ஐஸ்வர்யா, தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த வைர செட்கள், கோயில் நகைகளில் உள்ள வெட்டப்படாத வைரங்கள், பழங்கால தங்கத் துண்டுகள், நவரத்தினம் செட்கள், தங்கத்துடன் கூடிய முழு பழங்கால வெட்டப்படாத வைரம்- இரண்டு கழுத்து துண்டுகள் பொருந்திய காதணிகள், ஆரம் நெக்லஸ் மற்றும் சுமார் 60 சவரன் வளையல்கள் காணாமல் போயிருப்பதாக அந்த புகாரில் கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா.

இதுகுறித்து தேனாம்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே அங்கு நகைகள் இருப்பது தெரியும் என்றும் ஐஸ்வர்யா கூறியிருக்கிறார்.

 

Related post