கொரோனா குமார் டிராப் ஆகாது – இயக்குனர் கோகுல்

 கொரோனா குமார் டிராப் ஆகாது – இயக்குனர் கோகுல்

ரெளத்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இயக்குனர் கோகுல் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

தொடர்ந்து சிம்புவை வைத்து கொரோனா குமார் என்ற படத்தை இயக்கவிருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் இயக்குனர் கோகுல். ஆனால், அதற்குப் பிறகு இப்படத்திற்கான அறிவிப்பு எதுவும் வராமல் போனது. படமும் ட்ராப் ஆனது என்ற செய்தி பரவலாக பரவியது.

இந்நிலையில், ஆர் ஜே பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கி வரும் கோகுல், கொரோனா குமார் திரைப்படம் என்றும் ட்ராப் ஆகாது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “’கொரோனா குமார்’ படம் பற்றி நிறைய தகவல்கள் வருகின்றன. அந்தப் படத்தில் சிம்பு நடிக்கவில்லை என்றும் படம் டிராப் என்றும் சொல்கிறார்கள்.

அது டிராப்பா, இல்லையா என்பதை நான்தான் சொல்ல வேண்டும். அந்தப் படம் டிராப் இல்லை. அதை யாராலும் நிறுத்த முடியாது. கண்டிப்பாக அந்தப் படம் பற்றிய அறிவிப்பு வரும். அதில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவில்லை.

யார் நடிக்கிறார்கள் என்பதையும் நானே விரைவில் அறிவிக்கிறேன். அதுவரை பொய் தகவல்களை நம்ப வேண்டாம்’ என்றார்.

 

Spread the love

Related post

You cannot copy content of this page