மீண்டும் தொடங்கிய “இந்தியன் 2”; ரசிகர்கள் உற்சாகம்!

 மீண்டும் தொடங்கிய “இந்தியன் 2”; ரசிகர்கள் உற்சாகம்!

இயக்குனர் ஷங்கர் – உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவானது இந்தியன் 2. இப்படத்தை லைகா நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வந்தது.

70% படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், இயக்குனர் ஷங்கர் மற்றும் லைகாவுடன் கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. இதனால் இப்படம் நிறுத்தப்பட்டது.

இதனால் ”இந்தியன் 2” படப்பிடிப்பு மீண்டும் தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழத் துவங்கியது.

இந்நிலையில், லைகாவுடன் உதயநிதி இணைந்து இப்படத்தை மீண்டும் உருவாக்க இருப்பதாக தகவல் வெளியானது. இச்செய்தியை உண்மை தான் என்று கூறும் விதத்தில் நேற்று இரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இன்று முதல் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. லைகாவுடன் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து இந்தியன் 2 படத்தை முடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

 

Related post