ரெடியாகிறது “காந்தாரா 2” !?

 ரெடியாகிறது “காந்தாரா 2” !?

கடந்த வருடம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி கன்னடத்தில் மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் காந்தாரா திரைப்படம் வெளியாகி சுமார் 400 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக் குவித்தது…

தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி வருகிறார் ரிஷப் ஷெட்டி. அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரிஷப். கடந்த இரண்டு மாதங்களாக தனது உதவியாளர்களுடன் சேர்ந்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம் ரிஷப் ஷெட்டி.

இதன் இரண்டாம் பாகம் மழைக்காலத்தில் எடுக்க வேண்டிய தேவை இருப்பதால் இந்த வருடம் ஜூன் மாதத்தில் அதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார் ரிஷப். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று இந்த வருடத்தில் முடித்து அடுத்த வருடம் கோடை விடுமுறையை முன்னிட்டு படத்தினை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

 

Related post