நோ ஹீரோ; ஒன்லி காமெடியன் – தோல்வியால் வடிவேலு எடுத்த முடிவு!

 நோ ஹீரோ; ஒன்லி காமெடியன் – தோல்வியால் வடிவேலு எடுத்த முடிவு!

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”. பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவிற்கு இப்படம் மூலம் எண்ட்ரீ கொடுத்தார் வடிவேலு.

இப்படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்ததால், மிகவும் நொந்து போனார் வடிவேலு. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற வடிவேலு, அங்கு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது, இனி காமெடியனாகவே தொடரப்போவதாகவும், ஹீரோவாக நடிப்பதை தவிர்ப்பதாகவும் கூறினார்.

அதுமட்டுமல்லாமல், இதற்கு முன் தன்னுடன் நடித்த சில காமெடி நடிகர்களை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள வடிவேலு முடிவெடுத்துள்ளாராம்.

 

Related post