ஓராண்டை கொண்டாடும் “கே.ஜி.எஃப் 2”!

 ஓராண்டை கொண்டாடும் “கே.ஜி.எஃப் 2”!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னடத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் “கே.ஜி.எஃப்”. இப்படம் மிகப்பெரும் அளவிற்கு வெற்றி பெற்றதால், அதன் தொடர்ச்சியாக சேப்டர் 2’ஐ உருவாக்கினார் பிரசாந்த் நீல்.

இப்படத்தில் யஷ் ஒரு மாபெரும் ஆக்‌ஷன் எண்டர்டெயினராக மாறி தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்களை தன்வசப்படுத்திக் கொண்டார்.

இந்த கே ஜி எஃப் 2 படமானது கடந்த வருடம் ஏப்ரல் 14 அன்று வெளியாகி ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது.

இன்றோடு கே ஜி எஃப் 2 வெளியாகி ஓராண்டு ஆகிவிட்டதால், இணையத்தில் யஷ் ரசிகர்களை அதை கொண்டாடி வருகின்றனர்.

Related post