பொன்னியின் செல்வன்.. முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடும் லைகா

 பொன்னியின் செல்வன்.. முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடும் லைகா

லைகா தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என் அறிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், 2023-ம் கோடை விடுமுறையில் ‘பொன்னியின் செல்வன்-2’ ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ குறித்து இன்று மாலை 4 மணிக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சிறப்பான தகவல் ஒன்று வெளியாக உள்ளதாகவும், அது என்ன என்பதை யூகிக்க முடிகிறதா? என்றும் பதிவிடப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.

Related post