10 நாட்களில் 300 கோடி; பொன்னியின் செல்வன் 2 படைத்த சாதனை!

 10 நாட்களில் 300 கோடி; பொன்னியின் செல்வன் 2 படைத்த சாதனை!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் பாகம் 2.

கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி இப்படம் திரை கண்டது. சில பல கலவையான விமர்சனங்களை இப்படம் சந்தித்தாலும், மக்கள் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து திரையரங்கிற்கு வந்த வண்ணம் தான் உள்ளனர்.

முதல் பாகத்தில் செய்த ஒரு உண்மைத்தன்மையை இரண்டாம் பாகத்தில் கொடுக்கத் தவறியிருக்கிறார் மணிரத்னம்.

முதல் பாகம் 500 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாம் பாகம் பத்து நாட்களில் 300 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. வசூல் ரீதியாக இரண்டாம் பாகம் சற்று சறுக்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Related post