கேப்டன் படத்திற்கு பிறகு ஆர்யா தனது 34வது படத்திற்கு இன்று பூஜை போட்டுள்ளார். கேப்டன் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு பெரிதான வெற்றி தரவில்லை என்பதால் தனது அடுத்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார் ஆர்யா. தனது அடுத்த படமான 34 வது படத்தை இயக்குனர் முத்தையா அவர்களிடம் கொடுத்திருக்கிறார் ஆர்யா.. விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் முத்தையா இயக்கும் படம் இதுவாகும். இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே வெந்து தணிந்தது […]Read More
Tags : new movie
தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்க் இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். இவர் இசையமைக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வரிசையாக பல கோடிகளுக்கு கல்லா கட்டி வருகிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இந்நிலையில், நிவின் பாலி நடிக்கும் மலையாள படம் ஒன்றிற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார் அனிருத். இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் அனிருத். இயக்குன ஹனீப் அதேனி இப்படத்தை இயக்கவிருக்கிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. Read More
மிகப்பெரும் தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் முதல் முறையாக சினிமாவிற்கு இறங்கி நடித்த படம் தான் “தி லெஜண்ட்”. பல கோடி செலவில் உருவான இப்படம், மக்கள் மத்தியில் போதுமான வரவேற்பை பெற முடியவில்லை. வசூலிலும் மிகப்பெரும் அடி விழுந்தது. இதை எதையும் பொருட்படுத்தாமல், தனது அடுத்த படத்திற்கான பணிகளை துவக்கியிருக்கிறாராம் சரவணன். இதற்காக பிரபல இயக்குனர்கள் பலரையும் அழைத்து கதை கேட்டு வருகிறாராம் நாயகன். விரைவில் இயக்குனரை முடிவு செய்து, அடுத்த படத்திற்கான பணிகளை உடனே துவங்கவிருக்கிறாராம் […]Read More
OTT தளமான “SONYLIV” தனது புதிய தமிழ் வெப் தொடருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, “THE MADRAS MURDER” (தி மெட்ராஸ் மர்டர்) என தலைப்பிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரினை சூரியபிரதாப்.S, எழுதி-இயக்க, BIGPRINT PICTURES சார்பாக I.B.கார்த்திகேயன் தயாரிக்கிறார். இயக்குனர் A.L.விஜய் SHOWRUNNER-ஆக செயல்படவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வெப் தொடர் 1940-களில் மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த ஒரு பிரபல கொலை வழக்கினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாக […]Read More
சீயான் விக்ரம் தற்போது கோப்ரா படப்பிடிப்பை முடித்து அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில், சீயான் விக்ரம் மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை நடத்திக் கொண்டிருந்தார் இயக்குனர் விக்ரம். இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாக இருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. படத்திற்கு மைதானம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. […]Read More
நடிகர் கார்த்தி கைவசம் சர்தார், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில படங்களை வைத்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வரும் கார்த்தி, ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கவிருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பையும் துவங்கவிருக்கிறார்கள். ஏற்கனவே ட்ரீம் வாரியர் நிறுவனத்திற்காகத் தான், டாணாக்காரன் படத்தினை இயக்கியிருந்தார் தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது. Read More