வாடிவாசல்: லண்டனில் வெற்றிமாறன்!

 வாடிவாசல்: லண்டனில் வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்க வெளிவந்து மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் விடுதலை. இதன் முதல் பாகம் கடந்த மாதம் வெளியானது.

இரண்டாம் பாகம் வெகு விரைவில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கிறது. இரண்டு பாகங்களின் வேலைகளையும் முடித்துவிட்ட வெற்றிமாறன், அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்தை கையில் எடுத்திருக்கிறார்.

இதில், சூர்யா கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற டெஸ்ட் ஷூட் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், விரைவில் படப்பிடிப்பினை துவங்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

இப்படத்தில் CG காட்சிகள் அதிகம் இடம் பெறும் என்பதால், வெற்றிமாறன் தற்போது லண்டன் சென்றிருக்கிறார். அங்கு, சிஜி பணிகளுக்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, வாடிவாசல் திரைப்படத்திற்காகத்தான் அதிகமான பொருட்செலவில் சிஜி காட்சிகள் உருவாக்கப்படுகிறதாம்.

வெற்றிமாறன் இலண்டனில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

வாடிவாசல் திரைப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post