கைகோர்ப்போம்.. துயர் துடைப்போம் – விஜய் ட்விட்

 கைகோர்ப்போம்.. துயர் துடைப்போம் – விஜய் ட்விட்

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட புயலால் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

சென்னைவாசிகள் பலர் இருப்பிடம், உணவு, குடிநீர் இன்றி தத்தளித்து வருகின்றனர். பல தொண்டு நிறுவனங்களோடு இணைந்து அரசு மக்களை காத்து வரும் நிலையில் நடிகர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “ சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம் துயர்துடைப்போம்.” என்று கூறியுள்ளார்.

Related post