இன்று வெளியாகிறது ராஜ் கமலின் அடுத்த படத்திற்கான அப்டேட்!
விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்த படத்தயாரிப்பில் இறங்கியிருக்கிறது உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம்.
இந்நிறுவனத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் இன்று மாலை 6.30 மணியளவில் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிடவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது..
சிம்பு நடிக்க தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் விரைவில் உருவாக இருக்கும் அந்த படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கவிருக்கும் அப்டேட் தான் அது என்கிறார்கள்.
அதிகாரப்பூர்வ செய்தி மாலை வெளிவரும். அதுவரை காத்திருப்போம்.
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இதற்கு முன் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தினை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.