கன்னட நடிகர்களை நேரில் வரவழைத்த பாராட்டிய பிரதமர்

 கன்னட நடிகர்களை நேரில் வரவழைத்த பாராட்டிய பிரதமர்

கே ஜி எஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களின் மூலம் உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது கன்னட திரையுலகம்.

தொடர்ந்து பிரம்மாண்ட தயாரிப்பில் களம் இறங்கி அடிக்கத் தொடங்கியது கன்னட சினிமா.

கே ஜி எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை வாரிக் குவித்தது. காந்தாரா சுமார் 400 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது.

இதனால், இந்திய சினிமா உலகம் ஒரு புதுமைல் கல்லை எட்டி பார்த்தது. உலக சினிமாவில் இந்திய சினிமாவின் முத்திரையை அழுத்தமாக பதித்தது.

இந்நிலையில், கே ஜி எஃப் படத்தின் ஹீரோ யஷ் மற்றும் காந்தாரா படத்தின் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டியை நேரில் வரவழைத்து பாராட்டியிருக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

 

Related post