ரஜினிக்கு வில்லனாக பஹத் பாசில்!?

 ரஜினிக்கு வில்லனாக பஹத் பாசில்!?

ஜெயிலர் மிகப்பெரும் வெற்றி பெற்றதால் அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

தனது அடுத்த படத்திற்கான பணிகள் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. ரஜினியின் அடுத்த படமான 170வது படத்தை ஜெய்பீம் பட புகழ் ஞானவேல் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில், ரஜினிகாந்திற்கு வில்லனாக பஹத் பாசில் நடிக்கவிருக்கிறாராம். அமிதாப் பச்சன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், தெலுங்கு நடிகரான ஷர்வானந்த், மலையாள நடிகையான மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிக்கவிருக்கிறாரார்களாம்.

போலி என்கவுண்டரை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறாராம் ரஜினிகாந்த்.

செப்டம்பர் மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது.

 

Related post