இயக்குனர் ஞானவெல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் வேட்டையன். படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருக்கிறார் ரஜினிகாந்த். சுமார் 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது எனவும், விரைவில் படத்தின் அடுத்த அப்டேட் வெளியிடப்படும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். Read More
Tags : Gnanavel
ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது “தலைவர் 170”. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பானது சில தினங்களுக்கு முன் பூஜையோடு திருவனந்தபுரத்தில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில், ரஜினிகாந்த், மஞ்சுவாரியர், ஜி எம் சுந்தார், விஜய் டிவி ரக்ஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பானது நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் நடைபெறவிருக்கிறது. பஹத் பாசில் மற்றும் ராணா […]Read More
ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது “தலைவர் 170”. படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பமாக இருக்கிறது. இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட உட்ச நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். மேலும், இப்படத்தில் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.Read More
ஜெயிலர் மிகப்பெரும் வெற்றி பெற்றதால் அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். தனது அடுத்த படத்திற்கான பணிகள் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. ரஜினியின் அடுத்த படமான 170வது படத்தை ஜெய்பீம் பட புகழ் ஞானவேல் இயக்கவிருக்கிறார். இப்படத்தில், ரஜினிகாந்திற்கு வில்லனாக பஹத் பாசில் நடிக்கவிருக்கிறாராம். அமிதாப் பச்சன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தெலுங்கு நடிகரான ஷர்வானந்த், மலையாள நடிகையான மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிக்கவிருக்கிறாரார்களாம். போலி என்கவுண்டரை விசாரிக்கும் […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மகிழ்ச்சியில் இருக்கிறார் ரஜினிகாந்த். தனது அடுத்த படத்தின் பணிகளையும் தற்போது துவக்கியிருக்கிறார். ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 15ஆம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மிக பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் இன்னும் ஓரிரு தினங்களில் துவங்கப்பட இருக்கிறது. போலி என்கெளண்டர் பற்றிய கதையை மையப்படுத்தி […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட முடியும் தருவாயில் அந்த படம் தற்போது உள்ளது. கையோடு மகள் இயக்கும் லால் சலாம் படத்திலும் சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடித்துவருகிறார். இந்த படத்தினை முடித்ததும் ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். ஜூலை மாதத்தில் இதன் படப்பிடிப்பு இருக்கும் என்கிறார்கள். மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக விக்ரம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 169வது படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். மிகப்பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருணத்தில் இருக்கிறது. இந்நிலையில், சற்று முன் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் ரஜினிகாந்தின் 170 வது படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த படத்தை ஜெய்பீம் படத்தினை இயக்கிய ஞானவேல் இயக்குவார் என்றும் அனிருத் இசையமைப்பார் […]Read More
சூர்யா நடிக்க ஞானவேல் இயக்கத்தில் ஓடிடி’யில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் ஜெய்பீம். இத்திரைப்படம் வெளியாகி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் அதைச் சிறப்பிக்கும் விதமாக ‘ஜெய்பீம்’ படத்தின் திரைக்கதையைப் புத்தகமாகக் கொண்டுவர இயக்குனர் ஞானவேல் திட்டமிட்டுள்ளார். அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் படத்தின் ஸ்கிரிப்ட் மட்டுமல்லாமல், படம் உருவான விதம் குறித்து அதில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலரும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். இதையொட்டி சூர்யா தலைமையில் விழா […]Read More
2டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து நடித்து வெளிவந்த திரைப்படம் தான் ஜெய்பீம். இப்படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இப்படம் ஓடிடி’யில் வெளியாகி மிகப்பெரும் வரவேபைப் பெற்றது. இப்படம் ஆஸ்கர் வரை சென்றது. இதனைத் தொடர்ந்து இந்த இயக்குனர் அடுத்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தான் தயாரிக்க உள்ளனர். இந்த படமும் உண்மை கதையை பின்னணியாக வைத்தே உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆரம்ப பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறதாம். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஷூட்டிங் […]Read More
சுர்யா தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தினை முடித்ததும் உடனடியாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் சூர்யா. ஆனால், வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் விடுதலை படத்தின் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், வாடிவாசல் படத்தின் பணிகள் துவங்கப்பட இன்னும் காலதாமதமாகுமாம். ஆகவே, இந்த இடைவெளியில் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தை முடித்து விட நடிகர் சூர்யா திட்டமிட்டிருக்கிறாராம்… […]Read More