ஜெயிலர் படத்திற்கு எழுந்த புதிய சிக்கல்!?

 ஜெயிலர் படத்திற்கு எழுந்த புதிய சிக்கல்!?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் “ஜெயிலர்”. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜெயிலர் படத்துக்கு புதிய சிக்கல் எழுந்திருக்கிறது. அதாவது மலையாளத்திலும் ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படம் ரிலீஸாகவிருக்கிறதாம். அதனை சக்கீர் மடத்தில் என்பவர் இயக்க என்.கே.மொகம்மது தயாரித்திருக்கிறார். மலையாள ஜெயிலரும் தமிழ் ஜெயிலர் ரிலீஸாகும் சமயத்தில் கேரளாவில் ரிலீஸாகவிருக்கிறது.

இச்சூழலில் செய்தியாளர்களை சந்தித்த சக்கீர் மடத்தில், ஜெயிலர் என்ற பெயரில் இரண்டு படங்களும் ரிலீஸானால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படும். எனவே தமிழ் ஜெயிலரின் பெயரை படக்குழு மாற்ற வேண்டும் என இயக்குநர் சக்கீர் மடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும் இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகியதாகவும் ஆனால் பெயரை மாற்றுவதற்கு அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்துக்கு இந்தப் பெயர்தான் கதைக்கு பக்காவாக பொருந்துகிறது. எனவே இந்தப் பெயரை மாற்றினால் கதைக்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. எனவே நிச்சயம் பெயரை படக்குழு மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்பதால் இதே பெயரில்தான் கேரளாவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post