ஜெயிலர் 2ஆம் பாகம் எடுக்கும் திட்டம் இருக்கிறது – நெல்சன்!

 ஜெயிலர் 2ஆம் பாகம் எடுக்கும் திட்டம் இருக்கிறது – நெல்சன்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்து வரும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. நாளுக்கு நாள் வசூல் மழையில் நனைந்து வரும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டம் இருப்பதாக இயக்குனர் நெல்சன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஜெயிலர் மட்டுமல்லாது பீஸ்ட், கோலமாவு கோகிலா படங்களின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கும் திட்டம் இருப்பதாகவும் இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார்.

அப்படி இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் அனிருத் தான் இசையமைப்பார் என்றும் இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார்.

விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post