சம்பளத்தை உயர்த்திய ஜெயம் ரவி!?

 சம்பளத்தை உயர்த்திய ஜெயம் ரவி!?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இம்மாதம் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் பொன்னியின் செல்வனாக நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. முதல் பாகம் மிகப்பெரும் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்தது அகிலன். பெரிதான வசூலை கொடுக்கத் தவறினாலும், படத்திற்கான ஓபனிங்க் பெரிதாகவேஇருந்தது.

தனக்கான ஓபனிங்க் கிடைத்துவிட்டது என்பதால் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்திருக்கிறாராம் ஜெயம்ரவி.

ஜெயம் ரவியின் நடிப்பில் அடுத்ததாக ’இறைவன்’, ‘சைரன்’ தயாராக உள்ள நிலையில், ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம், தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என அடுத்தடுத்து படங்கள் இருக்கும் நிலையில், தனது சம்பளத்தை அதிகரித்துள்ளார்.

 

Related post