ஏழு நாட்களில் 300 கோடி; சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன்!!

 ஏழு நாட்களில் 300 கோடி; சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன்!!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இப்படம் உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பினை இப்படம் நிவர்த்தி செய்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

ஆம், தொடர்ந்து இப்படத்தின் வசூல் வேட்டை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

படம் வெளியாகி ஏழு நாட்களில் மட்டும் படத்தின் மொத்த வசூல் சுமார் ரூ. 324 கோடியை தாண்டி உள்ளது.

500 கோடியை நெருங்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்…

 

Related post