ஒருநாளுக்கு 5 காட்சிகள் அனுமதி; “லியோ” படத்திற்கு உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு!

 ஒருநாளுக்கு 5 காட்சிகள் அனுமதி; “லியோ” படத்திற்கு உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு!

லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் “லியோ”.

படம் வரும் 19 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், படக்குழு அதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், லியோ படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது தமிழக அரசு.

படக்குழுவினரின் கோரிக்கையை ஏற்று படம் வெளியாகும் முதல் ஆறு நாட்களுக்கு ஒருநாளைக்கு சுமார் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு.

அந்த காட்சி அதிகாலை 4 மணியா அல்லது 7 மணியா என்பதை காவல் துறையின் அனுமதி பெற்று அந்தந்த திரையரங்குகள் திரையிடும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Related post