சீக்கிரமாகவே வாடிவாசல்… வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்!

 சீக்கிரமாகவே வாடிவாசல்… வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வந்த திரைப்படம் “விடுதலை பாகம் 1”. இது மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அதன், இரண்டாம் பாகத்தின் பணிகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் வெற்றிமாறன்.

சில வருடத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட சூர்யாவின் வாடிவாசல் படம் எப்போது தான் துவங்குவீர்கள் என்று வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பிய போது, “ தற்போது விடுதலை பாகம் 2 படத்திற்கான ஷூட்டிங்க் சென்று கொண்டிருக்கிறது.

இப்படத்தின் பணிகள் முடிந்ததும் விரைவில் வாடிவாசல் படத்தின் வேலைகளை துவங்க இருக்கிறேன். இந்நிலையில், சூர்யா தனது வீட்டில் வளர்க்கும் காளையைப் போன்று, ஒரு காளையை ரோபோவாக வடிவமைக்கக் கூறியிருக்கிறோம்.

அதற்கான பணிகள் தற்போது அமெரிக்காவில் நடந்து வருகிறது. வாடிவாசல் படத்தினை முடித்ததும் வடசென்னை 2 படத்தின் பணிகளும் விரைவில் துவங்க இருக்கிறோம். கமிட் செய்த படங்களை முடித்த பிறகு விஜய்யுடன் ஒரு படத்தில் நிச்சயம் இணைவேன்.” என்று கூறினார்.

Related post