மாமன்னன் படத்திற்காக வடிவேலுவிற்கு தேசிய விருது கொடுக்கலாம் – விக்னேஷ் சிவன்!

 மாமன்னன் படத்திற்காக வடிவேலுவிற்கு தேசிய விருது கொடுக்கலாம் – விக்னேஷ் சிவன்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் நடிப்பில் உருவாகி வெளிவந்து ஹிட் அடித்த படம் தான் “மாமன்னன்”.

படத்தினைப் பார்த்த பிரபலங்கள் பலரும், படக்குழுவினரை வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் படக்குழுவினரை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், “ மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்!

வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும்

முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கியிருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும் அபாயம் இருந்தாலும் தனது அபார நடிப்பால் திரையில் முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டியிருக்கும் வடிவேலு sir இந்த நூற்றாண்டு கண்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை!

உதய் சார் கேரியரில் இதுவே உச்சம். நிஜ வாழ்வில் ஒரு அரசியல் ஆளுமையாக இருந்தபோதிலும் ஒரு இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் கொடுத்ததோடு இந்த மாபெரும் படைப்பு உருவாக பக்க பலமாக துணை நின்றதில்
அவரது நேர்மை வெளிப்படுகிறது. ” என்று கூறியிருக்கிறார்.

 

Related post