ஜவான் படம் உருவாக என் அண்ணன் விஜய் தான் காரணம் – அட்லீ!

 ஜவான் படம் உருவாக என் அண்ணன் விஜய் தான் காரணம் – அட்லீ!

ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லீ. இவர் இயக்கிய நான்கு படங்களில் மூன்று படங்கள் விஜய்யை வைத்து இயக்கியிருந்தார்.

தற்போது ஐந்தாவது படமாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதன் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில், இயக்குனர் அட்லீ, ஷாருக்கான், விஜய் சேதுபதி, யோகிபாபு, ப்ரியாமணி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட படத்தில் வேலை பார்த்திருக்கும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.,

விழாவில் பேசிய அட்லீ, “ ஜவான் படத்தினை இயக்கும் வாய்ப்பு என் அண்ணன் என் தளபதி விஜய் அவர்களால் மட்டுமே கிடைத்தது. அவர் இல்லாமல் நான் இங்க இல்லை. அண்ணன் தான் என்னை ஊக்கப்படுத்தினார்.

என்ன பண்ணுவன்னு தெரியாது. இந்த படத்தை நீ பண்ட்ற என்று விஜய் அண்ணன் தான் என்னை பண்ண சொன்னாரு. எப்போதுமே 6 மாசம் மட்டுமே படப்பிடிப்பு நடத்துவேன். ஆனால், இந்த படம் ஷூட்டிங்க் நடந்ததுமே கொரோனா வந்திடுச்சி. அதனால, படப்பிடிப்பு தடைபட்டு போச்சு.

இப்போ ரெடி ஆகிடுச்சி. சந்திராயனை விண்ணுக்கு அனுப்பிய விஞ்ஞானி படித்த சாய்ராம் கல்லூரியில் எனது படத்தின் விழா நடப்பது எனக்கு பெருமை தான்.

படத்திற்கு ஹீரோயின் யார் என்ற கேள்வி வந்தபோது என் டார்லிங் நயன்தாரா தான் பர்ஸ்ட் சாய்ஸ். அவங்களும் ஓகே சொல்லி படத்துக்குள்ள வந்தாங்க. ஓணம் என்பதால், அவர்களால் இந்த விழாவில் கலந்துக்க முடியல..

பல வருடங்களுக்கு முன்பு ஷாருக்கான் சார் வீட்டு கேட் முன்பு நின்று புகைப்படம் எடுத்திருக்கிறேன். ஒருநாள், அந்த கேட் எனக்காக திறந்தது. உலகமே போற்றும் நடிகரான ஷாருக்கான் அங்கு என்னை வரவேற்க வெளியே காத்திருந்தார்.” என்று கூறினார்.

 

Related post