பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் .. வெளிவரும் தேதி அறிவிப்பு!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், விக்ரம் பிரபு, பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இப்படம் இதுவரைக்கும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வசூல் சாதனை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் இதுவாகும்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குவினர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட படக்குழு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

 

Related post