தளபதி படம் முடியட்டும் “கைதி 2” உடனே பண்ணிடலாம் – அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

 தளபதி படம் முடியட்டும் “கைதி 2” உடனே பண்ணிடலாம் – அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியிருந்தார்.

மாபெரும் வெற்றியடைந்த இப்படம், இரண்டாவது வாரமாக அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அடுத்த படத்திற்கான பணிகளில் தற்போது மும்முரமாக களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தளபதி விஜய்யின் அடுத்த படத்தை விரைவில் தொடங்கவிருக்கிறார் லோகேஷ்.

இப்படத்தை முடித்ததும் கார்த்தியின் கைதி படத்தின் தொடர்ச்சியை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் லோகேஷ்.

இந்த அறிவிப்பை கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கூறியுள்ளார். கைதி படத்தில் டில்லி கதாபாத்திரம் அதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்விக்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இதற்கான அறிவிப்பு அடுத்தடுத்த வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Spread the love

Related post

You cannot copy content of this page