“நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காந்தாரா’, இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார். ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய ‘காந்தாரா’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், […]Read More
Tags : Rajinikanth
3, வை ராஜா வை படங்களைத் தொடர்ந்து, புதியப் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாயகனாக அதர்வா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அனிருத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தில் தனது தந்தையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்க ப்ளான் செய்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. அடுத்த மாதம் இப்படத்திற்கான பூஜை நடைபெறவிருக்கிறது. இன்னும் ஓரிரு தினத்தில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது… Read More
தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக இன்றளவும் உயர்ந்து நிற்பவர் நடிகர் ரஜினிகாந்த். ஆன்மிகத்தில் மிகவும் நாட்டமுள்ளவரான ரஜினிகாந்த், அவ்வப்போது ஆன்மிக சுற்றுப் பயணமும் மேற்கொள்வார். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது படுவேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஜினிகாந்தின் வீட்டிற்கு பன்னூர் மகாத்மா என அழைக்கப்படும் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைவர் நேற்று ரஜினியின் வீட்டுக்கு வருகை புரிந்தார். அப்போது ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி தலைவருக்கு […]Read More
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதனால் முழுக்க முழுக்க ஜெயிலில் நடப்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு தற்போது கடலூர் அருகே நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் ரஜினி மற்றும் யோகிபாபு நடிக்கும் முக்கிய […]Read More
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார் ,பார்த்திபன் , பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் வெளியான தினத்தில் இருந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் வசூலிலும் சக்கை போடு போடுகிறது. இப்படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்திருந்த சரத்குமாரின் நடிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரிதும் பாராட்டினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக […]Read More
தெறி, மெர்சல் , பிகில் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சுமார் 30 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் சுவாரசியமாக இருந்ததாக நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைவர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வதித்தார். அதன் பிறகு நயன்தாராவுடன் சேர்ந்து படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி, தளபதி […]Read More
அஜித் நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனம் புதிதாக ஒரு படம் தயாரிக்க இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்… இச்செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தினை தொடர்ந்து அஜித் லைகா நிறுவனத்திற்கு அடுத்தடுத்து இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளாராம். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறாராம். தற்போது நடித்து வரும் ஜெயிலர் படம் முடிந்ததும் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யா விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேத் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “கடவுளின் கருணையினாலும், பெற்றோரின் ஆசிர்வாதத்தாலும் தனக்கு வீர் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குகுழந்தையை கணவர் விசாகனும் மகன் வேத்தும் நானும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சௌந்தர்யா – விசாகன் […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிக்கும் 169வது படமான ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூப்பர்ஸ்டாரின் 170வது படத்தை இயக்கும் இயக்குனர் இவர் தான் என்று ஒரு தகவல் இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிக்க சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரிக் குவித்த டான் படத்தினை இயக்கிய சிபி சக்ரவர்த்தி தான் ரஜினிகாந்தின் அடுத்த படத்தினை இயக்கவிருக்கிறார் என்ற […]Read More
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம்பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தை லை நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில், பல நட்சத்திரங்கள் விருந்தினர்களாக கலந்து கொள்ளவிருக்கின்றனர். ஏ ஆர் […]Read More